
சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக, ஆதி ரத்தினமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம்...
தனக்கே உரித்தான தேஜ சண்டேஸ்வரருடனும் தனது தேவி மார்களுடனும் சூரியன் காட்சி கொடுக்கும் திருத்தலம்...
ஆடு, யானை இரண்டும் சேர்ந்த வினோத உரு வம் வழிபட்ட திருத்தலம்...
தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து முறையான உபதேசம் பெற்று, 16 லட்சம் முறை பஞ்சாட்சரத்தை (நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்) ஓதினால், இந்தப் பிறவியி லேயே இறைவனைக் காணலாம் எனும் நம்பிக்கை, இன்றும் இருந்து வரும் திருத்தலம்...
சுக்கிர தோஷ பரிகாரத்துக்கான திருத்தலம்...
மலர்கள் கொண்டு அர்ச்சித்தால், எல்லா விதமான வினைகளையும் தீர்த்து வைக்கும் இறை வன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்...
ஆகம- சாஸ்திர மற்றும் பதிகச் சிறப்புகள் பெற்ற திருத்தலம்...
பாரிஜாத வனம், வன்னி வனம், குருந்த வனம், வில்வ வனம், ஆதிரத்தினேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம், விஜயேஸ் வரம், அஜகஜேஸ்வரம், சரவணப் பொய்கை என்று பற்பல பெயர்களால் அழைக்கப்பெறும் திருத்தலம்...
இத்தனை பெருமைகளும் கொண்ட திருத்தலம் எங்கே இருக்கிறது? புறப்படுங்கள், போகலாம்!
காரைக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலை விலும், தேவகோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவாடானை திருத்தலம் போகலாம். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் மூலமோ, வசதிக் கேற்ப தனி வாகனங்களிலோ செல்லலாம்.
ஊரின் மையப் பகுதியில், 130 அடி உயர ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது, இந்தப் பழைமையான ஆலயம். கிழக்கு ராஜ கோபுரம் உயரமானது மட்டுமல்ல, ஒன்பது நிலைகளுடன் வெகு அழகாக உள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே செல்கிறோம்.
பெரிய கோயில். விசாலமான முகப்பு மண்டபம். இது நூற்றுக்கால் மண்டபம். மண்டபத்தில் ஆங்காங்கே சில பக்தர்கள்... யாரோ சிலர் கேட்டுக் கொண்டிருக்கும் வினாக்களுக்கு மிகப் பொறுமை யாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் அர்ச் சகர்... பரிகாரம் செய்வதற்காகக் காத்திருக்கும் ஒரு குடும்பம்... மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருக்கோயில் அலுவலகம்... என்று தென்னகக் கோயி லின் அச்சு அசலான தோற்றத்துடன், விபூதி, மஞ்சள், கற்பூரம், பன்னீர் ஆகியவை கலந்த வாசனையும், ரம்மியமான கலகலப்புமாகத் திகழ் கிறது திருவாடானை திருக்கோயில்.
திருவாடானை. அழகான பெயராகத் தெரிந்தாலும், இதன் பொருள்? அதைத் தெரிந்து கொள்ள, காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
முற்காலத்தில், இந்தத் தலத்துக்குப் பாரி ஜாத வனம் என்றோ ஆதிரத்தினபுரி என்றோதாம் பெயர்கள்.
புஷ்பபத்திரை நதிக்கரையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வருணனின் மகன் வாருணி என்பவன், முனிவரது தவத்துக்கு இடையூறு செய்தான். கோபக்காரரான துர்வாசர் சும்மா இருப் பாரா? 'இந்தா, சாபம் பிடி' என்றார்.
ஆட்டுத் தலையும் யானை உடலும் கொண்ட வினோத வடிவத்தைப் பெற்ற அவன், அளவற்ற பசியாலும் துன்பப்பட்டான். என்ன செய்வது? துர்வாசரிடமே மன்னிப்புக் கேட்டான்.
பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற துர்வாசர், அதன்பின், பாரிஜாதவனத்துக்குச் சென்று ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால், சாபம் நீங்கும் என்றார்.
வாருணி அவ்வாறே செய்ய, ஆடும் ஆனையு மாக வழிபட்டுச் சாபம் நீங்கிய இடம் என்பதால், ஆடானை ஆனது; இறைவனும் ஆடானைநாதர் (அல்லது அஜகஜேஸ்வரர்; அஜம்- ஆடு, கஜம் - யானை) ஆனார்.
நூற்றுக் கால் மண்டபம் என்பது, ராஜ கோபுரத்தில் இருந்து உள் வாயில் நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கும் அமைந்துள்ளது எழில் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள்.
உள் வாயில் அருகே வந்து விடுகிறோம். நமக்கு இடப் புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபப் பகுதிக்கு (தெற்குப் பகுதி) அலங்கார மண்டபம் என்றே பெயர். உற்சவ காலங்களில், சுவாமியும் அம்பாளும் அலங்காரத்துடன் எழுந்தருளும் இடம். இந்த மண்டபத்தை ஒட்டிய சுவரில், ஸ்தல வரலாறை ஓவியச் சிற்பமாக அமைத்திருக்கிறார்கள்.
நூற்றுக் கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் யாக சாலை. உள் வாயிலின் ஒரு பக்கத்தில் விநாயகர்; இன்னொரு பக்கத்தில் சுப்ரமணியர். வழிபட்டு உள்ளே நுழைகிறோம். கொடிமரம். நந்தி. கொடிமரத்துக்கு முன்பாக, ஒரு பெரிய மணி மண்டபம் போன்ற இந்தப் பெரிய இடம், அப்படியே உள் பிராகாரத்துடன் சேர்கிறது. நந்தி இருப்பதால், இது நந்தி மண்டபம் எனப்படுகிறது.
இங்கிருந்து தொடங்கி, அப்படியே உள் பிராகார வலம் வரலாமா? கிழக்குச் சுற்றில், முதலில் அகத்திய விநாயகர். அடுத்து தேஜசண்டர். அருகிலேயே, தனது தேவியரான உஷா- பிரத்யுஷா சமேத சூரியன்.
சிவாலயங்களில், நிர்மால்ய அதிகாரியாகவும், கோயில் கணக்கு வழக்கு அதிகாரியாகவும் சண்டேஸ்வரர் எனும் சண்டர் இருப்பாரில்லையா? அதுபோல, சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் அவரவர்க்கான சண்டர்கள் உண்டு. 'சண்டர்' என்றால், கோபமான, பாசத்தோடு கூடிய உரிமை கொண்ட, உக்கிரமான... என்பன போன்ற பொருள்கள் உண்டு. அந்த தெய்வத்தின் மீது நிறைந்த பாசம் கொண்டவர் என்றும், தவறு செய்தாலோ தீங்கிழைத்தாலோ கோபப்படக்கூடியவர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கானவர் கும்ப சண்டர், ஆத்மலிங்கத்துக்கு- த்வனி சண்டர் என்பதாக ஆகமக் குறிப்புகள் உள்ளன.
அந்த விதத்தில், சூரிய பகவா னுக்குரிய சண்டேஸ்வரர், தேஜஸ் (ஒளி) சண்டர் ஆவார். சூரியனுக்கு அருகில் தேஜசண்டர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.
சூரியதேவன், இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆற்றலைப் பெற்றான். அதனால், இங்கே சூரிய பரிகாரம் வெகு விசேஷம்.
கிருத யுகம். சூரியன், தனது ஒற்றைச் சக்கரத் தேரில் சஞ்சரித் துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனது தேர்க்கால் (சக்கரம்) தடை-பட்டது; மேற்கொண்டு பயணிக்க முடிய--வில்லை. ஒன்றும் புரியாமல் சூரியன் விழிக்க, அசரீரியாக அவனுக்கு அருள் வழங்கினார் இறைவன்.
எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டதோ, அந்த இடத்-தில் இறங்கி, அங்கேயே லிங்க வழிபாடு நடத்தச் சொல்லி அசரீரி ஆணையிட்டது. சூரியனும் இறங்கினான். பாரிஜாத வனத்தின் (தேவலோக மரமான பாரிஜாதம், அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வனமாகப் பெருகிக் கிடந்தது) நடுவில், மணிமுத்தா நதியின் கிழக்குக் கரையில், நீல ரத்தினத்தால் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சூரியன், அருகிலேயே தீர்த்தம் ஒன்றையும் ஏற்படுத்தி, சிவனாரை வழிபட்டான். இந்த வழிபாட்டால், சூரியனின் ஒளி மேம்பட்டது. அவனது சஞ்சாரம் தடை நீங்கப் பெற்றது. சூரியன், கோள்களின் மண்டலத்துக்கு அதிபதியாக்கப் பட்டான். நீல மணியால் ஆனவர் என்பதாலும், ஆதி காலத்தில் ஏற்பட்டவர் என்பதாலும், சுவாமியும் ஆதி ரத்தினேஸ்வரர் ஆனார்.
இந்த சூர்ய தீர்த்தம், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், சகலவித தோஷங்களும் நிவர்த்தியாகும்.
பிராகாரத்தில் தொடர்ந்து வருண விநாயகர் மற்றும் மார்க்கண்டேய விநாயகர். அடுத்து தனீஸ்வரர். தெற்குச் சுற்றில் திரும்பினால், ஆலய பக்கவாட்டு வாயில். அடுத்து, அறுபத்துமூவரின் மூலவர்கள். தொடர்ந்து அறுபத்துமூவரது சித்திரங்கள். தெற்குச் சுற்றின் மூலையில், சப்த மாதர்.
மெள்ள மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. அடுத்த தாக, சோமாஸ்கந்தர். தொடர்ந்து ஆதிலிங்கம், அர்ச்சுனலிங்கம், கௌதம லிங்கம், வருணலிங்கம், கோமுக்தீஸ்வரர், ஜோதிர்லிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, தேவி- பூதேவி உடனாய வரத ராஜர் மற்றும் பிருகுலிங்கம் (இவருக்கு நந்தியும் உண்டு).
வடமேற்குப் பகுதியில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர். இவர் உயரமானவர்; வஜ்ரம், சக்தி, அபயம்- வரம் ஆகியவற்றுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். இந்த முருகர் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், 'ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை பெருமாளே!' என்று அருளிச் செய்தார். வடமேற்கு மூலையில் மகாலட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பினால், உற்சவ மூர்த்தங்கள். இந்தச் சுற்றின் கிழக்குப் பகுதியில் நடராஜ சபை. இந்த நடராஜர் வெகு சிறப்பா னவர். அவரும் சிவகாமியம்மையும் ஐம்பொன் திருமேனியர்.
நடராஜர் மட்டுமா ஆடுகிறார்? அவர் ஆட ஆட, பிரம்மா தாளமிட, விஷ்ணு மேளமிட, தும்புருவும் நாரதரும் தத்தமது கருவிகளை இசைக்க, வியாக்ரபாதரும் பதஞ்சலியும் வணங்கி நிற்க... ஆஹா, கண்கொள்ளா காட்சி! அடுத்து பைரவர். மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பினால், கார்த்திகாதேவி ஒருபுறமும், ரோகிணி ஒருபுறமுமாக சந்திரன். அடுத்து, தனிச் சந்நிதியில் சனி பகவான்.
திருவாடானை கோயில், செட்டி நாட்டுப் பகுதியில் உள்ளது. நகரத் தாரின் திருப்பணியைக் கண்டுள்ளது. நந்தி மண்டபத்தில் நின்று மூலவர் சந்நிதியைப் பார்த்தால், நகரத்தார் திருப்பணி அமைப்பின் சாயலை நன்கு உணர முடியும். நந்திக்கும் சந்நிதி முகப்புக்கும் இடையில், திருவாசி போன்ற பெரிய வளைவு; விளக்கேற்றுவதற்கு வசதியாக, அதில் நிறைய விளக்குகள்.
நந்தி மண்டபத்தைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதியை அடைகிறோம்.
கருவறை... முன்னே அர்த்த மண்டபம்... அதற்கும் முன்னே ஸ்நபனப் பகுதி. மெதுவாக உள்ளே பார்வையைச் செலுத்தினால், அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரான ஆடானைநாதர். சதுரபீட ஆவுடையார் கொண்ட குட்டை பாணம். நீலக்கல் பாணத்தில் ஆவுடை சேர்க்கப்பட்டவர். இவர்மீது திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி யுள்ளார்.
மாதோர் கூறுகந்தேற தேறியஆதியானுறை ஆடானைபோதினால் புனைந்து ஏத்துவார் தமைவாதியா வினை மாயுமேமங்கை கூறினன் மான்மறியுடைஅங்கையான் உறை ஆடானைதங்கையால் தொழுதேத்த வல்லவர்மங்குநோய் பிணியுமாமேசுண்ண நீறணி மார்பில் தோல் புனைஅண்ணலான் உறை ஆடானைவண்ண மாமலர் தூவிக் கைதொழஎண்ணுவார் இடர் ஏகுமே
இந்தப் பதிகத்துக்கு இரண்டு வகை சிறப்புகள். பாட்டுக்குப் பாட்டு... வினை தீரும், நோய் விலகும், துன்பம் மாயும் என்றெல்லாம் கூறுவதால், இது திருநீற்றுப் பதிகத்துக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இதனை ஓதினால், எத்தகைய நோயும் துன்பமும் சிக்கலும் தீரும்.
இன்னொரு சிறப்பு, அர்ச்சனையைப் பற்றிக் கூறப் பட்டுள்ள தகவல்கள்.
போதினால் புனைந்து ஏத்துதல் (போது- அரும்பு), தோடுமாமலர் தூவி, வண்ண மாமலர் தூவி, கையணி மலர், தேனணிம்மலர், நலங்கொள் மாமலர், கந்தமாமலர், தூய மா மலர் என்று பற்பல மலர்களைக் கொண்டு ஆடானைநாதருக்கு அர்ச்சனை செய்யும் முறைகள் பேசப்பட்டுள்ளன. ஆகவே, பலவித மலர்களைக் கொண்டு இந்தத் தலத்து இறைவனுக்கு பூஜை செய்தால், வினைகள் அகலும். வகை வகையான மலர்களைக் கொண்டு வந்து மக்கள் இவரை வழிபடுவதை இன்றும் காணலாம்.
மூலவரை வணங்கி, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். தட்சிணாமூர்த்தி சந்நிதி, மண்டபம் அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது. சனகாதி முனிவர்களும் இருக்கிறார்கள்.
சிவாகமங்கள், சிவபெருமானது முகங்களிலிருந்து உதித்தன என்பது ஐதீகம்.
இருபத்தெட்டு சிவாகமங்களில், காரண ஆகமமும், காமிக ஆகமும் மிக முக்கியமானவை. திருவாடானை தலத்து தட்சிணாமூர்த்தி, ஆகமங் களை அருள் உபதேசம் செய்து கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
வேத சாஸ்திர ஆகமக் கல்வி கற்கக் கூடியவர்கள், தட்சிணாமூர்த்தி திருமுன் அமர்ந்து உபதேசம் பெறு வதும், பரிவர்த்தனை பெறுவதும், ஜபம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் ஓதுவதும் இன்றும் நடைபெற்று வருகின்றன. இதை மெய்ப்பிப்பதாக, அருணகிரிநாதரும், 'ஞான ஆகமத்தை அருள் ஆடானை' என்று போற்றுகிறார்.
சற்று நில்லுங்கள். வழக்கமாகக் காண்பதுபோல, கோஷ்ட மாடங்களை மட்டும் பார்த்து விட்டு நகர்ந்து விடாதீர்கள். கோஷ்டப் பகுதியில், சற்றே உயரத்தில் உள்ள நாசித் துளைகளைப் (சிறிய மாடங்கள்) பாருங்கள்!
தனக்கே உரித்தான தேஜ சண்டேஸ்வரருடனும் தனது தேவி மார்களுடனும் சூரியன் காட்சி கொடுக்கும் திருத்தலம்...
ஆடு, யானை இரண்டும் சேர்ந்த வினோத உரு வம் வழிபட்ட திருத்தலம்...
தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து முறையான உபதேசம் பெற்று, 16 லட்சம் முறை பஞ்சாட்சரத்தை (நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்) ஓதினால், இந்தப் பிறவியி லேயே இறைவனைக் காணலாம் எனும் நம்பிக்கை, இன்றும் இருந்து வரும் திருத்தலம்...
சுக்கிர தோஷ பரிகாரத்துக்கான திருத்தலம்...
மலர்கள் கொண்டு அர்ச்சித்தால், எல்லா விதமான வினைகளையும் தீர்த்து வைக்கும் இறை வன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்...
ஆகம- சாஸ்திர மற்றும் பதிகச் சிறப்புகள் பெற்ற திருத்தலம்...
பாரிஜாத வனம், வன்னி வனம், குருந்த வனம், வில்வ வனம், ஆதிரத்தினேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம், விஜயேஸ் வரம், அஜகஜேஸ்வரம், சரவணப் பொய்கை என்று பற்பல பெயர்களால் அழைக்கப்பெறும் திருத்தலம்...
இத்தனை பெருமைகளும் கொண்ட திருத்தலம் எங்கே இருக்கிறது? புறப்படுங்கள், போகலாம்!
காரைக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலை விலும், தேவகோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவாடானை திருத்தலம் போகலாம். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் மூலமோ, வசதிக் கேற்ப தனி வாகனங்களிலோ செல்லலாம்.
ஊரின் மையப் பகுதியில், 130 அடி உயர ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது, இந்தப் பழைமையான ஆலயம். கிழக்கு ராஜ கோபுரம் உயரமானது மட்டுமல்ல, ஒன்பது நிலைகளுடன் வெகு அழகாக உள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே செல்கிறோம்.
பெரிய கோயில். விசாலமான முகப்பு மண்டபம். இது நூற்றுக்கால் மண்டபம். மண்டபத்தில் ஆங்காங்கே சில பக்தர்கள்... யாரோ சிலர் கேட்டுக் கொண்டிருக்கும் வினாக்களுக்கு மிகப் பொறுமை யாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் அர்ச் சகர்... பரிகாரம் செய்வதற்காகக் காத்திருக்கும் ஒரு குடும்பம்... மண்டபத்தின் வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருக்கோயில் அலுவலகம்... என்று தென்னகக் கோயி லின் அச்சு அசலான தோற்றத்துடன், விபூதி, மஞ்சள், கற்பூரம், பன்னீர் ஆகியவை கலந்த வாசனையும், ரம்மியமான கலகலப்புமாகத் திகழ் கிறது திருவாடானை திருக்கோயில்.
திருவாடானை. அழகான பெயராகத் தெரிந்தாலும், இதன் பொருள்? அதைத் தெரிந்து கொள்ள, காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
முற்காலத்தில், இந்தத் தலத்துக்குப் பாரி ஜாத வனம் என்றோ ஆதிரத்தினபுரி என்றோதாம் பெயர்கள்.
புஷ்பபத்திரை நதிக்கரையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வருணனின் மகன் வாருணி என்பவன், முனிவரது தவத்துக்கு இடையூறு செய்தான். கோபக்காரரான துர்வாசர் சும்மா இருப் பாரா? 'இந்தா, சாபம் பிடி' என்றார்.
ஆட்டுத் தலையும் யானை உடலும் கொண்ட வினோத வடிவத்தைப் பெற்ற அவன், அளவற்ற பசியாலும் துன்பப்பட்டான். என்ன செய்வது? துர்வாசரிடமே மன்னிப்புக் கேட்டான்.
பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற துர்வாசர், அதன்பின், பாரிஜாதவனத்துக்குச் சென்று ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால், சாபம் நீங்கும் என்றார்.
வாருணி அவ்வாறே செய்ய, ஆடும் ஆனையு மாக வழிபட்டுச் சாபம் நீங்கிய இடம் என்பதால், ஆடானை ஆனது; இறைவனும் ஆடானைநாதர் (அல்லது அஜகஜேஸ்வரர்; அஜம்- ஆடு, கஜம் - யானை) ஆனார்.
நூற்றுக் கால் மண்டபம் என்பது, ராஜ கோபுரத்தில் இருந்து உள் வாயில் நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கும் அமைந்துள்ளது எழில் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள்.
உள் வாயில் அருகே வந்து விடுகிறோம். நமக்கு இடப் புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபப் பகுதிக்கு (தெற்குப் பகுதி) அலங்கார மண்டபம் என்றே பெயர். உற்சவ காலங்களில், சுவாமியும் அம்பாளும் அலங்காரத்துடன் எழுந்தருளும் இடம். இந்த மண்டபத்தை ஒட்டிய சுவரில், ஸ்தல வரலாறை ஓவியச் சிற்பமாக அமைத்திருக்கிறார்கள்.
நூற்றுக் கால் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் யாக சாலை. உள் வாயிலின் ஒரு பக்கத்தில் விநாயகர்; இன்னொரு பக்கத்தில் சுப்ரமணியர். வழிபட்டு உள்ளே நுழைகிறோம். கொடிமரம். நந்தி. கொடிமரத்துக்கு முன்பாக, ஒரு பெரிய மணி மண்டபம் போன்ற இந்தப் பெரிய இடம், அப்படியே உள் பிராகாரத்துடன் சேர்கிறது. நந்தி இருப்பதால், இது நந்தி மண்டபம் எனப்படுகிறது.
இங்கிருந்து தொடங்கி, அப்படியே உள் பிராகார வலம் வரலாமா? கிழக்குச் சுற்றில், முதலில் அகத்திய விநாயகர். அடுத்து தேஜசண்டர். அருகிலேயே, தனது தேவியரான உஷா- பிரத்யுஷா சமேத சூரியன்.
சிவாலயங்களில், நிர்மால்ய அதிகாரியாகவும், கோயில் கணக்கு வழக்கு அதிகாரியாகவும் சண்டேஸ்வரர் எனும் சண்டர் இருப்பாரில்லையா? அதுபோல, சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் அவரவர்க்கான சண்டர்கள் உண்டு. 'சண்டர்' என்றால், கோபமான, பாசத்தோடு கூடிய உரிமை கொண்ட, உக்கிரமான... என்பன போன்ற பொருள்கள் உண்டு. அந்த தெய்வத்தின் மீது நிறைந்த பாசம் கொண்டவர் என்றும், தவறு செய்தாலோ தீங்கிழைத்தாலோ கோபப்படக்கூடியவர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கானவர் கும்ப சண்டர், ஆத்மலிங்கத்துக்கு- த்வனி சண்டர் என்பதாக ஆகமக் குறிப்புகள் உள்ளன.
அந்த விதத்தில், சூரிய பகவா னுக்குரிய சண்டேஸ்வரர், தேஜஸ் (ஒளி) சண்டர் ஆவார். சூரியனுக்கு அருகில் தேஜசண்டர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.
சூரியதேவன், இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆற்றலைப் பெற்றான். அதனால், இங்கே சூரிய பரிகாரம் வெகு விசேஷம்.
கிருத யுகம். சூரியன், தனது ஒற்றைச் சக்கரத் தேரில் சஞ்சரித் துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனது தேர்க்கால் (சக்கரம்) தடை-பட்டது; மேற்கொண்டு பயணிக்க முடிய--வில்லை. ஒன்றும் புரியாமல் சூரியன் விழிக்க, அசரீரியாக அவனுக்கு அருள் வழங்கினார் இறைவன்.
எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டதோ, அந்த இடத்-தில் இறங்கி, அங்கேயே லிங்க வழிபாடு நடத்தச் சொல்லி அசரீரி ஆணையிட்டது. சூரியனும் இறங்கினான். பாரிஜாத வனத்தின் (தேவலோக மரமான பாரிஜாதம், அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வனமாகப் பெருகிக் கிடந்தது) நடுவில், மணிமுத்தா நதியின் கிழக்குக் கரையில், நீல ரத்தினத்தால் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சூரியன், அருகிலேயே தீர்த்தம் ஒன்றையும் ஏற்படுத்தி, சிவனாரை வழிபட்டான். இந்த வழிபாட்டால், சூரியனின் ஒளி மேம்பட்டது. அவனது சஞ்சாரம் தடை நீங்கப் பெற்றது. சூரியன், கோள்களின் மண்டலத்துக்கு அதிபதியாக்கப் பட்டான். நீல மணியால் ஆனவர் என்பதாலும், ஆதி காலத்தில் ஏற்பட்டவர் என்பதாலும், சுவாமியும் ஆதி ரத்தினேஸ்வரர் ஆனார்.
இந்த சூர்ய தீர்த்தம், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், சகலவித தோஷங்களும் நிவர்த்தியாகும்.
பிராகாரத்தில் தொடர்ந்து வருண விநாயகர் மற்றும் மார்க்கண்டேய விநாயகர். அடுத்து தனீஸ்வரர். தெற்குச் சுற்றில் திரும்பினால், ஆலய பக்கவாட்டு வாயில். அடுத்து, அறுபத்துமூவரின் மூலவர்கள். தொடர்ந்து அறுபத்துமூவரது சித்திரங்கள். தெற்குச் சுற்றின் மூலையில், சப்த மாதர்.
மெள்ள மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. அடுத்த தாக, சோமாஸ்கந்தர். தொடர்ந்து ஆதிலிங்கம், அர்ச்சுனலிங்கம், கௌதம லிங்கம், வருணலிங்கம், கோமுக்தீஸ்வரர், ஜோதிர்லிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, தேவி- பூதேவி உடனாய வரத ராஜர் மற்றும் பிருகுலிங்கம் (இவருக்கு நந்தியும் உண்டு).
வடமேற்குப் பகுதியில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர். இவர் உயரமானவர்; வஜ்ரம், சக்தி, அபயம்- வரம் ஆகியவற்றுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். இந்த முருகர் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், 'ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை பெருமாளே!' என்று அருளிச் செய்தார். வடமேற்கு மூலையில் மகாலட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பினால், உற்சவ மூர்த்தங்கள். இந்தச் சுற்றின் கிழக்குப் பகுதியில் நடராஜ சபை. இந்த நடராஜர் வெகு சிறப்பா னவர். அவரும் சிவகாமியம்மையும் ஐம்பொன் திருமேனியர்.
நடராஜர் மட்டுமா ஆடுகிறார்? அவர் ஆட ஆட, பிரம்மா தாளமிட, விஷ்ணு மேளமிட, தும்புருவும் நாரதரும் தத்தமது கருவிகளை இசைக்க, வியாக்ரபாதரும் பதஞ்சலியும் வணங்கி நிற்க... ஆஹா, கண்கொள்ளா காட்சி! அடுத்து பைரவர். மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பினால், கார்த்திகாதேவி ஒருபுறமும், ரோகிணி ஒருபுறமுமாக சந்திரன். அடுத்து, தனிச் சந்நிதியில் சனி பகவான்.
திருவாடானை கோயில், செட்டி நாட்டுப் பகுதியில் உள்ளது. நகரத் தாரின் திருப்பணியைக் கண்டுள்ளது. நந்தி மண்டபத்தில் நின்று மூலவர் சந்நிதியைப் பார்த்தால், நகரத்தார் திருப்பணி அமைப்பின் சாயலை நன்கு உணர முடியும். நந்திக்கும் சந்நிதி முகப்புக்கும் இடையில், திருவாசி போன்ற பெரிய வளைவு; விளக்கேற்றுவதற்கு வசதியாக, அதில் நிறைய விளக்குகள்.
நந்தி மண்டபத்தைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதியை அடைகிறோம்.
கருவறை... முன்னே அர்த்த மண்டபம்... அதற்கும் முன்னே ஸ்நபனப் பகுதி. மெதுவாக உள்ளே பார்வையைச் செலுத்தினால், அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரான ஆடானைநாதர். சதுரபீட ஆவுடையார் கொண்ட குட்டை பாணம். நீலக்கல் பாணத்தில் ஆவுடை சேர்க்கப்பட்டவர். இவர்மீது திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி யுள்ளார்.
மாதோர் கூறுகந்தேற தேறியஆதியானுறை ஆடானைபோதினால் புனைந்து ஏத்துவார் தமைவாதியா வினை மாயுமேமங்கை கூறினன் மான்மறியுடைஅங்கையான் உறை ஆடானைதங்கையால் தொழுதேத்த வல்லவர்மங்குநோய் பிணியுமாமேசுண்ண நீறணி மார்பில் தோல் புனைஅண்ணலான் உறை ஆடானைவண்ண மாமலர் தூவிக் கைதொழஎண்ணுவார் இடர் ஏகுமே
இந்தப் பதிகத்துக்கு இரண்டு வகை சிறப்புகள். பாட்டுக்குப் பாட்டு... வினை தீரும், நோய் விலகும், துன்பம் மாயும் என்றெல்லாம் கூறுவதால், இது திருநீற்றுப் பதிகத்துக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இதனை ஓதினால், எத்தகைய நோயும் துன்பமும் சிக்கலும் தீரும்.
இன்னொரு சிறப்பு, அர்ச்சனையைப் பற்றிக் கூறப் பட்டுள்ள தகவல்கள்.
போதினால் புனைந்து ஏத்துதல் (போது- அரும்பு), தோடுமாமலர் தூவி, வண்ண மாமலர் தூவி, கையணி மலர், தேனணிம்மலர், நலங்கொள் மாமலர், கந்தமாமலர், தூய மா மலர் என்று பற்பல மலர்களைக் கொண்டு ஆடானைநாதருக்கு அர்ச்சனை செய்யும் முறைகள் பேசப்பட்டுள்ளன. ஆகவே, பலவித மலர்களைக் கொண்டு இந்தத் தலத்து இறைவனுக்கு பூஜை செய்தால், வினைகள் அகலும். வகை வகையான மலர்களைக் கொண்டு வந்து மக்கள் இவரை வழிபடுவதை இன்றும் காணலாம்.
மூலவரை வணங்கி, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். தட்சிணாமூர்த்தி சந்நிதி, மண்டபம் அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது. சனகாதி முனிவர்களும் இருக்கிறார்கள்.
சிவாகமங்கள், சிவபெருமானது முகங்களிலிருந்து உதித்தன என்பது ஐதீகம்.
இருபத்தெட்டு சிவாகமங்களில், காரண ஆகமமும், காமிக ஆகமும் மிக முக்கியமானவை. திருவாடானை தலத்து தட்சிணாமூர்த்தி, ஆகமங் களை அருள் உபதேசம் செய்து கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
வேத சாஸ்திர ஆகமக் கல்வி கற்கக் கூடியவர்கள், தட்சிணாமூர்த்தி திருமுன் அமர்ந்து உபதேசம் பெறு வதும், பரிவர்த்தனை பெறுவதும், ஜபம் செய்வதும், பஞ்சாட்சர மந்திரம் ஓதுவதும் இன்றும் நடைபெற்று வருகின்றன. இதை மெய்ப்பிப்பதாக, அருணகிரிநாதரும், 'ஞான ஆகமத்தை அருள் ஆடானை' என்று போற்றுகிறார்.
சற்று நில்லுங்கள். வழக்கமாகக் காண்பதுபோல, கோஷ்ட மாடங்களை மட்டும் பார்த்து விட்டு நகர்ந்து விடாதீர்கள். கோஷ்டப் பகுதியில், சற்றே உயரத்தில் உள்ள நாசித் துளைகளைப் (சிறிய மாடங்கள்) பாருங்கள்!
No comments:
Post a Comment